மீனவ குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

மீனவ குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
புதிய கட்டிடம் திறந்த எம்எல்எ

கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவ மழலை குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா உலக மீனவர் தினமான இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

அதன்பிறகு கேக் வெட்டி அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்பு பொட்டலங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வாவத்துறை பங்கு பணியாளர் லிகோரியஸ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஆசிர்வதித்து ஜெபம்செய்தார். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஆரல் வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story