திருவாரூர்: புத்தக கண்காட்சி துவக்க விழா

திருவாரூர்: புத்தக கண்காட்சி துவக்க விழா

புத்தக கண்காட்சி

திருவாரூரில் புத்தகத் திருவிழாவின் துவக்க விழா கூடுதல் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ் எஸ் நகரில் புத்தகத் திருவிழாவின் துவக்க விழாவினை கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா தலைமையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.

மேலும், புத்தகத் திருவிழாவில் புத்தக அரங்கினை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ,மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story