புத்தக கண்காட்சி துவக்கம்

புத்தக கண்காட்சி துவக்கம்

புத்தக கண்காட்சி 

சேலம் மாவட்டம், தலைவாசலில் புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.

தலைவாசல் ஒன்றிய அலுவலகம் எதிரில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி அலுவலக வளாகத்தில் அரசு பொதுநலத்துறை இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. நல்லாசிரியர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தலைவாசல் அரசு பொது கிளை நூலகர் அண்ணாமலை வரவேற்றார்.

ஐக்கிய விவசாய சங்க மாநில தலைவர் அரங்கசங்கரய்யா, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வக்கீல் கோவிந்தன், பட்டுத்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையை கெங்கவல்லி தொகுதி நல்லதம்பி எம். எல். ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வடசென்னிமலை அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் முருகேசன், நாவக்குறிச்சி ஊராட்சி மன்றதலைவர் தமிழரசி பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காமக்காபாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் நீலவேணி செல்வராஜ் நன்றி கூறினார்.

இந்த புத்தக கண்காட்சி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்

Tags

Next Story