திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில்  நீர்மோர் பந்தல் திறப்பு
திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு அணிகள் சார்பில் நீர் மோர் பந்தல் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை வாழங்கப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் மித்ரு நாகேந்திரன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார் நிகழ்ச்சியில் விருதுநகர் நகர செயலாளர் தனபாலன், பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story