நகர் மன்ற தலைவர்,உறுப்பினர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே தளபதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு உள்ளிட்டவர்கள் நீர் மோர் பந்தலினை திறந்து வைத்தனர். பின்னர் அனைவருக்கும் தயிர் சாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story