பண்ருட்டி அருகே வகுப்பறை கட்டிடம் திறப்பு

பண்ருட்டி அருகே வகுப்பறை கட்டிடம் திறப்பு

கட்டிட திறப்பு 

அண்ணாகிராமம் ஒன்றியம் மேல்பட்டாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிட்டங்களின் திறப்பு விழா நடந்தது.

கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம், சன்னியாசிப்பேட்டை , மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களை திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி. கே. வெங்கட்ராமன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.உடன் அண்ணாகிராமம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், மீரா குமாரி, ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், முன்னாள் தலைவர் கே ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story