திண்டுக்கலில் மாணவ, மாணவிகளுக்கு கிளப்புகள் துவக்க விழா

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் தமிழ் , ஆங்கிலம், அறிவியல், கணக்கு , சமூக அறிவியல் ஆகிய மாணவ, மாணவிகளுக்கு கிளப்புகள் துவக்க விழா நடந்தது.

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் தமிழ் ,ஆங்கிலம், அறிவியல், கணக்கு ,சமூக அறிவியல் ஆகிய மாணவ, மாணவிகளுக்கு கிளப்புகள் துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய பிரபு கிளப்புகளை துவக்கி வைத்தார்.

கோமையன்பட்டி பங்குத்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். இதில் பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய பிரபு பேசியதாவது: மாணவர்கள் ஒற்றுமையை கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றியை தன்னம்பிக்கையாக கொள்ள உங்களுக்கு இந்த கிளப்புகள் உதவும். நாம் அடுத்தவர்களை விட முன்னேற வேண்டும் மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இந்த கிளப்புகள் வளர்க்கும்.

ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. இந்த தனித்திறமையை வளர்ப்பதற்கு இந்த கிளப்புகள் உங்களுக்கு பயன்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story