கடலாடி கிராமத்தில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா

X
கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில் பருவதமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா வழக்கறிஞர் ப.கி. தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி ஐஇடி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், செயலாளர் டி.சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க, சர்வம் இயற்கை விவசாயி பண்ணை கமலக்கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலசபாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.முருகன் கால்நடை தீவன அங்காடியை திறந்து வைத்து, விவசாயிகள் நலன் கருதி அரசு உதவியுடன் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விவசாயிகள் உறுப்பினராகி பயன்பெற கேட்டுக்கொண்டார். இதில் வழக்கறிஞர் ப.கி. தனஞ்செயன் தலைமை உரையாற்றுகையில் ,விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளை பொருள்களை இடைத்தரகர் இன்றி அதிக இலாபத்திற்கு விற்பனை செய்து, மதிப்பு கூட்டி நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து ,விவசாயிகள் இலாபத்தை பங்கீடு வண்ணம் மத்திய அரசு நாபெட் உதவியுடன் 10கே திட்டத்தின் கீழ் தொடங்கியுள்ள பருவதமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவசாயிகள் பங்குதாரராகி பயன்விதைகள், பூச்சி மருந்துகள், உரங்கள் கால்நடை தீவனங்கள் ஆகியவற்றை பல கிராமங்களில் விற்பனை செய்ய குறைந்த விலையில் விவசாயிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலசபாக்கம் ஒன்றிய விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுகொண்டார். இந்த விழாவில் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் உதவி வேளாண்மை அலுவலர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். இதில் அன்பழகன், சித்ரா, மல்லிகா அர்சுனன் ஆகிய இயக்குனர்களும் தீவன விநியோகதர் குபேந்திரன் ,வெங்கடேசன் கணக்காளர், ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி ஒ. அசோக்குமார் நன்றி தெரிவித்தார்.
Next Story
