உணவுப் பாதுகாப்பு திட்ட தொடக்க விழா

உணவுப் பாதுகாப்பு திட்ட தொடக்க விழா
உணவு திருவிழாவில் பங்கேற்றவர்கள்
உணவுப் பாதுகாப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

கோபால்பட்டி வேம்பார்பட்டியில் தமிழ்நாடு நலிவுற்ற பெண்கள் குழந்தைகள் குடும்ப உணவுப் பாதுகாப்பு திட்ட தொடக்க விழா நடந்தது.திண்டுக்கல் டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.,வேம்பார்பட்டியில் டி.எம்.எஸ். எஸ்.எஸ்.மகளிர் குழுக்கள் இணைந்து இத்திட்டத்தை தொடங்கினர்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களும், உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி துணை சுகாதார மையத்தின் இயக்குநர் ஜான் நெப்போலியன் தலைமை வகித்தார்.

சிறப்பு மகப்பேறு மருத்துவர் டாக்டர் செல்வராணி முன்னிலை வகித்தார். திட்ட கண்காணிப்பாளர் அருள் சகாயராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். களப்பணியாளர் பொக்கிஷம் நன்றி கூறினார்.

Tags

Next Story