அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் திறப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் திறப்பு

திருவேங்கடம் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியிம் புதிதாக கட்டடத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். 

திருவேங்கடம் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியிம் புதிதாக கட்டடத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.115.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் வைத்து பள்ளி மாணவ / மாணவிகளுக்கு 150 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ /மாணவிகளுக்கு 126 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் தேவிகாராணி, திருவேங்கடம் பேரூராட்சித் தலைவர் பாலமுருகன், உதவிமக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பள்ளி மாணவ /மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story