முதியோர் இல்லத்தில் கூடம் திறப்பு

முதியோர் இல்லத்தில் கூடம் திறப்பு

முதியோர் இல்லத்தில் கூடம் திறப்பு

ஆறுமுகநேரி முதியோர் இல்லத்திற்கு டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் ரூ.5.31 லட்சம் செலவில் புதிய கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி சீனந்தோப்பு, தி லைட் சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் கோரிக்கையின்படி, டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் முதியோர் இல்லத்திற்காக ரூ.5.31 லட்சம் செலவில் 75அடி நீளம் 25 அடி அகலம் அளவில் ஒரு கொட்டகை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய புதிய கூடத்தை டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார். கோரிக்கையை நிறைவேற்றிய டி.சி.டபிள்யூ நிறுவனத்திற்கு முதியோர் இல்ல நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story