திருப்பைஞ்சீலியில் சுகாதார வளாகம் திறப்பு

திருப்பைஞ்சீலியில் சுகாதார வளாகம் திறப்பு

திறப்பு விழா 

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியல் தொட்டி ஆகியவற்றை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சீலி ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ வனத்தாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், ஊர் பொதுமக்களின் வசதிக்காகவும் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story