சேலம் மேற்கு தொகுதியில் சுகாதார வளாகம் திறப்பு

சேலம் மேற்கு தொகுதியில் சுகாதார வளாகம் திறப்பு

சுகாதார வளாகம் திறப்பு

சேலம் மேற்கு தொகுதியில் சுகாதார வளாகம் திறக்கப்பட்டத்து.

செல்லபிள்ளைக்குட்டை ஊராட்சி மல்லகவுண்டனூர் அருந்ததியர் காலனியில், அருள் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13½ லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்ட ஒதுக்கீடு செய்தார். இந்த புதிய சுகாதார வளாகமான பொது கழிப்பிடத்தை அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதேபோல் செல்லபிள்ளைக்குட்டை ஊராட்சி குப்பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலகுட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க,

அருள் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வகுப்பறைகள் திறக்கும் நிகழ்ச்சிக்கு அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பள்ளி மாணவர்களை கொண்டே அந்த வகுப்பறைகளை திறக்க செய்தார். மேலும் அவர் பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படித்திடவும், பெற்றோர், ஆசிரியர் ெசால்படி நடந்திடவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story