செய்யாறில் அறிவு சார் மையம் திறப்பு

செய்யாறில் அறிவு சார் மையம்  திறப்பு

புதிய நூலகம்

செய்யாறில் அறிவு சார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023 ஆம் ஆண்டு திட்டத்தில் 1கோடியே 83 லட்சம் லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

அதே சமயம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்ஒ.ஜோதி கலந்து கொண்டு பார்வையிட்டார். உடன் மாவட்ட ஊராட்சி குழு பார்வதி சீனிவாசன் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் J C K சீனிவாசன் மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் சிவகுமார் மாவட்ட விவசாய வர்த்தகர்க்குழு உறுப்பினர் கோபு நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், சரஸ்வதி ரவிக்குமார்,

கல்பனா விஜய் பாஸ்கர் , அகமத், மகாலட்சுமி விஜயகுமார், ஞானமணி சின்னதுரை, மணிவண்ணன், க.கோவேந்தன், மல்லிகா ராஜகோபால், கங்காதரன், மாவட்ட பிரதிநிதிகள் விஜயபாஸ்கர், சுந்தரேசன், கருணாநிதி நகர துணை செயலாளர் சதீஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story