மருதுபாண்டியர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க விழா

மருதுபாண்டியர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க விழா

மருதுபாண்டியர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க மற்றும் சாசன பணியேற்பு விழா நடந்தது

மருதுபாண்டியர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க மற்றும் சாசன பணியேற்பு விழா நடந்தது

தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில், லியோ சங்கம் மற்றும் சாசன பணியேற்பு விழா நடைபெற்றது .

இவ்விழாவில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் மா. விஜயா முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் பி.கருணாகரன், லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் பி.இமயவரம்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும், லயன்ஸ் மாவட்ட துணை ஆளுநர் ஏ.சவரிராஜ், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் மணிவண்ணன், ரத்னகுமார், ராஜாராம் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மருதுபாண்டியர் கல்லூரி லியோ சங்கத்தில் ஆர்த்தி, தலைவராகவும், கீர்த்திகா செயலாளராகவும், ஸ்ரீதேவி, பொருளாளராகவும் பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக மருதுபாண்டியர் கல்லூரி லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். இரா.பாரதிதாசன் வரவேற்றார். நிறைவாக லியோ சங்க மாணவி ஸ்ரீதேவி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.

Tags

Next Story