அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ராமன் நகரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ராமன் நகரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மேட்டூர் அருகே ராமன் நகர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் ரிப்பன் பெட்டி திறந்து வைத்து தர்பூசணி, வெள்ளரி, பானை நுங்கு ,கம்மங்கூழ் ,நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எமரால்டு வெங்கடாசலம், சேலம் புற நகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா சரவணன், மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், அம்மா பேரவை செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story