மேட்டூர் அருகே மேச்சேரியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மேட்டூர் அருகே மேச்சேரியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்

மேட்டூர் அருகே மேச்சேரியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரி பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நீர் மோர் பந்தலை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, முலாம்பழம் ,பனை நுங்கு, நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரசேகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், பேரூர் கழக செயலாளர் குமார், கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா, மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜரத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story