திருப்புகலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருப்புகலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு விழா 

நாகை மாவட்டம் திருப்புகலூரில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பாட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் கடைவீதியில் கோடைகாலத்தை ஒட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமருகல் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார்.கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி கலந்து கொண்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகள்,

நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பெரிய மணி, மாவட்ட துணை செயலாளர் அபுசாலிஹ்,மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர்,

திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித்,ஒன்றிய துணை செயலாளர் திருமேனி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேஸ்குமார், ஒன்றிய பொருளாளர் அருள்மணி, ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் மரவாடி சேகர்,அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story