பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகம் தணிப்பதற்காக பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி பழங்கள் வழங்கினார் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌ கொளுத்தும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.‌ இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார். கோடை வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள் நீர் மோர் வாங்கி பருகி தர்பூசணி பழங்கள் வாங்கி சென்றனர்.‌ இந்த நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் கார்மேகம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story