விருதுநகரில் பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

விருதுநகரில் பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

பாஜக சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல் 

விருதுநகரில் பாஜக சார்பில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில்பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனை முன்னட்டு தமிழகம் முழுவதும அனைத்து கட்சிகள் மற்றும் சார்பாகவும் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர், மோர் பந்தல் அமைத்து அவைகளை பொதுமக்களுக்கு வழங்கி சேவை செய்து வருகின்றனர்.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் ,மோர் பந்தல் துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நீர் மோர் பந்தலை கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர், தண்ணீர்,தர்ப்பூசணி போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story