சிவகாசி ஒன்றிய பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

சிவகாசி ஒன்றிய பகுதியில் அதிமுக சார்பில்  நீர்மோர் பந்தல் திறப்பு
நீர்மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் 
சிவகாசி ஒன்றிய பகுதியில் நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றிய பகுதிகளில், அதிமுக கட்சி சார்பில் பொது மக்களுக்கான நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்ப்பதற்காக சிவகாசி ஒன்றிய பகுதியான S.N.புரம், ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார்.

அதிமுக கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து,பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினார். நிகழ்ச்சியில், சிவகாசி மாநகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், அதிமுக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story