கொங்கணாபுரத்தில் நீர்மோர் பந்தல் துவக்கம்

கொங்கணாபுரத்தில் நீர்மோர் பந்தல் துவக்கம்

நீர்மோர் பந்தல் திறப்பு 

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்... தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பஸ் நிலையம் எதிரே நீர் மோர் பந்தலை கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையில் அதிமுக பொதுச் செயலாளரும்,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீர்மோர், தண்ணீர்,தர்பூசணி,இளநீர்,நுங்கு வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட பழ வகைகளும் மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story