புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா

ஐ.பெரியசாமி 

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த மாங்கரை ஊராட்சியில் புதிய நியாய விலைக் கடை தருமத்துப்பட்டி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றுக்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் ஐ.பெரியசாமி தலைமை வகித்து இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ப.க.சிவகுருசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணன், மலரவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story