ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு

ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு
புதிய கட்டிடங்கள் திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், நியாய விலை கடை கட்டிடங்கள், நியாய விலைக்கடை, பால் சேமிப்பு மையம், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம். ஊராட்சி செயலகங்கள், ஊராட்சி மன்ற கட்டடங்கள், மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் என மொத்தம் 18 கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story