சென்னிமலை கோவிலில் ரூ.1.22 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட முடிக்காணிக்கை மண்டபம் மற்றும் மலைக்கோயிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் தமிழக தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 11 முடி மழிக்கும் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் சரவணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம். சிவக்குமார், சக்தி மசாலா நிறுவன நிர்வாகிகள் டாக்டர்.பி.சி.துரைசாமி,சாந்தி துரைசாமி, பொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story