முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து நிழற்குடை திறப்பு !

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து நிழற்குடை திறப்பு !

 பேருந்து நிழற்குடை திறப்பு

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி ஓட்டப்பாலத்தில் புதிய பேருந்து நிழற்குடை திறக்கப்பட்டது.
தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி ஓட்டப்பாலத்தில் புதிய பேருந்து நிழற்குடை திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் ஓட்டப்பாலம் என்ற இடத்தில் கலைஞர் பேருந்து நிறுத்தம் புதிய பேருந்து நிழற்குடை கட்டி முடிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு‌.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிழற்குடையில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்ட கேக்கை வெட்டி முதல்வரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story