புதிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு

புதிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு

தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை ஒன்றிய குழுதலைவர் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முற்றாம்பட்டு, கள்ளிப்பட்டு, கொடுகூர், தாண்டவ மூர்த்தி குப்பம், பெரிய பாபு சமுத்திரம், குமளம் ஆகிய 6 கிராம பஞ்சாயத்துகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது.

கொடுகூர் பஞ்சாயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ஆர். எஸ். வாசன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராமு, சிவகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story