தென்இலுப்பையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு

தென்இலுப்பையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு

திறந்து வைக்கும் எம்எல்ஏ 

தென்இலுப்பையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.

செய்யாறு சட்டமன்ற தொகுதி உட்பட்ட அனக்காவூர் கிழக்கு ஒன்றியம் தென்இலுப்பை கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் 2023 -2024 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூபாய் 9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கலைஞர் கலையரங்கம் கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் க.லோகநாதன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திராவிட முருகன் அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story