பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் திறப்பு,எம்எல்ஏ பங்கேற்பு

சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி ஜனனி ஸ்ரீ நிலையம்பகுதியில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் திறந்து வைத்தார்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் உள்ளடங்கிய வார்டு எண் 200 செம்மஞ்சேரி ஜனனி ஸ்ரீ நிலையம் PHASE -1 பகுதியில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி 200 வது மாமன்ற உறுப்பினர் A.முருகேசன், 15 வது மண்டல உதவி ஆணையர், வட்ட செயலாளர் R.நாகராஜ், K.D.ரவி, S.P ஹரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொது மக்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Tags

Next Story