பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழா

பள்ளிபாளையம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளர் பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் நகரம், பல்லக்காபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நகரம் சார்பில் மூன்று இடங்களில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ,திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், வேட்பாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர். இதில் மதிமுக ,காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ,தமிழ் புலிகள் கட்சியினர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வுகளில் திரளாக பங்கேற்றனர். குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன்,திமுக நகர செயலாளர் அ.குமார் , பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம்" தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ ,வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து மற்றும் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story