பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு விழா

பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு விழா

பொதுப்பணித் துறை கோட்ட அலுவலகம் திறப்பு விழா

கள்ளகுறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் புதிதாக கட்டப்பட்ட பொதுப்பணித் துறை கோட்ட அலுவலகம் திறப்பு விழாவில் அமைச்சர் எவ வேலு கலந்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிக்கப்பட்டதையடுத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கோட்ட அலுவலகக் கட்டடம் தியாகதுருகம் புறவழி சாலையில் 2.73 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் வேலு புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தலைமைப் பொறியாளர் ராஜகோபால், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன்கள் தாமோதரன், சத்தியமூர்த்தி, துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அண்ணாதுரை, பெருமாள், நகர செயலாளர் மலையரசன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட பிரதிநிதி பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story