குத்துக்கல்வலசையில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா

குத்துக்கல்வலசையில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா

 ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா

ரேஷன் கடை கட்டிடம் திறப்பு
தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் தமிழ்செல்வி, துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், ஒன்றிய செயலா் அழகுசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவா் சத்யராஜ், துணைத் தலைவா் சண்முகசுந்தரம், சமக மாவட்ட அவைத் தலைவா் கேவிகே.துரை, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story