அண்ணா விளையாட்டரங்கில் மறுசீரமைக்கப்பட்ட நீச்சல் குளம்  திறப்பு

அண்ணா விளையாட்டரங்கில் மறுசீரமைக்கப்பட்ட நீச்சல் குளம்  திறப்பு
மறு சீரமைக்கப்பட்ட நீச்சல் குளத்தை திறந்து வைத்த  கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு செயல்பட்டில் இருந்த நீச்சல் குளமானது கடந்த பல ஆண்டுகளாக பழுதுடைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க பொது நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.14.50 இலட்சம் மதிப்பில் நிதிஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், நீச்சல் வீரர் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், நீச்சல் பயிற்சியாளர்கள், நீச்சல் வீரர் வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story