சாலை பாதுகாப்பு விழா துவக்கம்

சாலை பாதுகாப்பு விழா துவக்கம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு, தேசிய சாலை பாதுகாப்பு விழா துவக்கப்பட்டது.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு, தேசிய சாலை பாதுகாப்பு விழா துவக்கப்பட்டது.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 35வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா, நேற்று முன்தினம் முதல், பிப்., 14 வரை பல்வேறு இடங்களில் நடக்க உள்ளது.

இதன் துவக்க விழா நேற்று முன்தினம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவங்கியது. வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்."

Tags

Next Story