பள்ளி கட்டிடம் திறப்பு

பள்ளி கட்டிடம் திறப்பு

ஆலங்குளம் அருகே வீராணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ரூ. 40 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது.  

ஆலங்குளம் அருகே வீராணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ரூ. 40 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீராணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஆலங்குளம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது, வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் முன்னிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story