பேராவூரணி அருகே போட்டித் தேர்வுகளுக்கான ஸ்டடி சர்க்கிள் துவக்க விழா

பேராவூரணி அருகே போட்டித் தேர்வுகளுக்கான ஸ்டடி சர்க்கிள் துவக்க விழா
மாவட்ட வருவாய் அலுவலர் குத்துவிளக்கேற்றி வைத்தார்
பேராவூரணி அருகே போட்டித் தேர்வுகளுக்கான வாசிப்பு வட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சி, பிள்ளையார் திடலில் போட்டித் தேர்வுகளுக்கான கலாம் ஸ்டடி சர்க்கிள் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், கிராம நிர்வாக அலுவலர் பஷீர், ஒன்றியக் கவுன்சிலர் பாமா செந்தில்நாதன், நாடியம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம் செல்வன், பயிற்றுநர் நடராஜன் மற்றும் மாணவ, மாணவிகள், தேர்வுக்கு தயாராவோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story