புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பு கட்டிட திறப்பு விழா

புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பு கட்டிட திறப்பு விழா

கட்டிட திறப்பு விழா

பழனியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பு கட்டிடத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் துவக்கி வைத்தார். பழனி அருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டித்தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 31லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து பள்ளி கட்டிடத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி.செந்தில்குமார் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து வகுப்பறைகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story