அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தண்ணீர் பந்தல் திறப்பு

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சுந்தரபாண்டியபுரம் பேரூர், குற்றாலம் பேரூர் கழகம் ஆகிய பகுதிகளில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர், தர்பூசணி, லெமன் ஜூஸ், ஆகியவற்றை வழங்கினார். இதில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story