பெரியாம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

பெரியாம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல் 

பெரியாம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,இளநீர், தர்பூசணி வழங்கினார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் தாக்கம் உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல் திறக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

அதனையடுத்து இன்று தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பேருந்து நிலையம் பகுதிகளில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது.இந்த தண்ணீர்பந்தலை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,இளநீர்,தர்பூசணி,எழுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல் மாணவரணி ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் முருகன் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story