திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஆலங்குடியில் திமுக சார்பில் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி சிலட்டூர் ஊராட்சி கடையாத்துபட்டி கடைவீதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக்கால தண்ணீர் பந்தலை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (11-05-2024) திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர் மற்றும் பழங்கள் வழங்கி சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story