அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

பரமத்தி வேலூரில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டதண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

பரமத்திவேலுார் பகுதியில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் பரமத்தி, பாண்டமங்கலம், மாணிக்கம்நத்தம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி மற்றும் பழங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பரமத்திவேலுார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஜி என்கிற விஜயகுமார், அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ஜே.பி. ரவி, நகர செயலாளர்கள் பைக் சுகுமார், ரவீந்தர், பொன்னிவேலு என்கிற வேலுச்சாமி, நாராயணன், செல்வராஜ், மாணிக்கம் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story