அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

இராமாபுரம் பகுதியில்,அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விவேகானந்தன் ஏற்பாட்டில், நீர்மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராமாபுரம் பகுதியில்,அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விவேகானந்தன் ஏற்பாட்டில், நீர்மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி,செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணிபழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story