படூர் ஊராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

படூர் ஊராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
படூர் ஊராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம், படூர் ஊராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகசெங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம் எல் ஏ வும், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவருமான எஸ் ஆர் எல் இதயவர்மன் கலந்து கொண்டு நடமாடும் நீர் மோர் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்ததுடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் தர்பூசணி, இளநீர், நீர் மோர், பனை நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, பழ வகைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர், திமுக தலைமை பொது குழு உறுப்பினர் அன்புச் செழியன், ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ் உள்ளிட்டோருடன் மக்கள் பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story