தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர்  பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் அச்சிறுப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆலோசனைப்படி,சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் திண்டிவனம் மார்கம் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் ஜி.ஜெ.பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட இணை செயலாளர் எஸ்.அப்துல்ரசாக் ஏற்பாட்டில்,தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்டவர்களை வழங்கி வருகின்றனர். இதில் அச்சிறுப்பாக்கம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story