மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரம் பேருந்து நிலையம் அருகில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் K.C. சரவணன் ஏற்பாட்டில், நீர்மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது... இதில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி,செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணிபழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது,நகர மன்ற உறுப்பினர்கள், நகர கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்..

Tags

Next Story