பழவூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

பழவூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், முகநூல் நண்பர்கள் குழு சார்பில் பழவூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பேருந்து நிலையத்தில் இன்று (மே 1) காலை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், பழவூர் ஊராட்சி மன்ற தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

Tags

Next Story