ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில்  அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கே.பி முனுசாமி

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக கழக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி அவர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக கழக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி அவர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூர், சாமல்பட்டி, காரப்பட்டு, ஊத்தங்கரை,

அனுமன்தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM.தமிழ் செல்வம் தலைமையில் அதிமுக கழக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி அவர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

அதில் பொதுமக்களின் தாகம் தீர்க்க இளநீர், நீர் மோர், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய், உள்ளிட்ட நீர் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்வித்தார், இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட செயலாளர் அசோக் குமார்,

நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story