கோவையில் தொடர் மழை-கோவை குற்றாலம் மூடல்

கோவையில் தொடர் மழை-கோவை குற்றாலம் மூடல்

கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இரவில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக, கோவை குற்றாலம், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story