விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

விவேகானந்தா கல்வி நிறுவனம் 

திருச்செங்கோடு அருகே விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும்மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி கல்லூரி என18க்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கிய மகளிர் கல்லூரி நிறுவனமான விவேகானந்தா கல்லூரி நிறுவனத்தில்வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

காலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில் 6 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நேரத்தில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனையால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags

Next Story