ரிஷிவந்தியத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

ரிஷிவந்தியத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

வருமான வரி சோதனை 

கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் தொழுவந்தாங்கல் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள தொழுவந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரும் ஊராட்சி மன்ற தலைவருமான கீதா சுகுமார் வீட்டிலும், கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலாளர் துரைமுருகன் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்,

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய பணம் பெருமளவு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசியம் தகவலின் பெயரில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் ஆவணங்கள், பணங்கள் எதுவும் கைப்பற்றாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

திமுக பிரமுகர்கள் வீட்டில் சோதனைகள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story